அழுகண்ணர்2020-03-09T08:59:33+00:00

அழுகண்ணர்

இந்த யோக சித்தர் சர்வ காலமும் தியானத்தில் அமர்ந்து மனோன்மணியாளை தரிசித்து பேரானந்தத்தில் திளைத்து இருப்பவர். மிக எளிமையாக மற்றவர்களின் துன்பங்களுக்காக உருகும் மனம் கொண்டவர். தம்முடைய சீடர்கள் தம்மைவிட ஞானத்தில் மேலோங்க வேண்டும் என்று விருப்பம் உடையவர். இவரை அடிபணிந்து தொழுவதன் மூலம் தேவையான பொருள்வளம் பெறலாம், எதிரிகளை பணிய வைக்கும் ஆற்றல் பெற்றிடலாம். மேலும், நினைத்த்தை எளிதில் அடையும் சக்தி பெறவும், இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

அழுகண்ணர் வழிபாடு

நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.

அழுகண்ணர் வழிபாட்டின் நன்மைகள்


தம் வேண்டுதல்கள் நிறைவேற செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அழுகண்ணர் ஆசி கூடும்.
தேவையான பொருள் வளம் பெறவும், எதிரிகளை பணிய வைக்கும் ஆற்றல் பெறவும், நினைத்ததை அடையும் சக்தி பெறவும், இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

அழுகண்ணர் போற்றி

அன்பு நிறை சிந்தையரே அங்கமெலாம் மருந்தாம் அழுகண்ண சித்தரே போற்றி
துன்பு நிறை மாந்தரின் பிணி போக்கி அருளும் அழுகண்ண சித்தரே போற்றி
முன்பு நீர்தாம் எளிய உயிர்களின் வதை தடுத்து நின்ற அழுகண்ண சித்தரேபோற்றி
இன்புற்று வாழ எளிய தேக வகை யோக முறை வகுத்த அழுகண்ண சித்தரே போற்றி

அழுகண்ணர் போற்றியின் பொருள்:

தமது உடல் முழுதும் மருந்தின் தன்மை கொண்ட அன்பு உள்ளம் நிறைந்தவர். நோயால் துன்பம் படுகின்ற மக்களின் துன்பங்களை போக்கி அருளக்கூடியவர். உயிர் பலிகளை தடுத்து சன்மார்க்கம் தழைவிக்க செய்தவர். மனிதர்கள் இன்பமுடன் வாழ எளிமையான உடல் யோக முறைகளை வகுத்தவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.

18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை

வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,அழுகண்ணர் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Amaavaasai

    மே 7

    Pournami

    மே 23